இனி ரேஷன் கடைதான் பேங்க்.. இதெல்லாம் புதுசா வரப்போகுது!



ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி கேரள மாநிலத்தில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் கூடுதல் சேவைகள் மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

கேரளத்தில் சுமார் 14000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சுமார் 800 ரேஷன் கடைகளில் கூடுதல் இட வசதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளின் உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள அரசும் பரிசீலித்து வருகிறது. ரேஷன் கடைகளில் வங்கி சார்ந்த சேவைகளை வழங்குவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கூட்டணி அமைப்பதற்கு நான்கு வங்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் ரேஷன் கடைகளிலேயே வங்கி சேவைகளை பெறலாம்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog