ரயிலை மிஸ் பண்ணிட்டிங்களா! இனி கவலை வேண்டாம் இப்படியொரு ஆப்ஷன் இருக்கிறது.!


ரயிலை மிஸ் பண்ணிட்டிங்களா! இனி கவலை வேண்டாம் இப்படியொரு ஆப்ஷன் இருக்கிறது.!


இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு புதிய மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் ஒருவர் டிக்கெட் புக் செய்த பிறகு போர்டிங் ஸ்டேஷனை (ஏறும் இடம்) மாற்றி கொள்ளும் வகையில் ஐஆர்சிடிசி விதியின்படி புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வசதி ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் ஒருவர் தனது ஆன்லைன் புக்கிங் டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே தனது போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கொள்ள முடியும். பயணி ரயில் பயணத்தைத் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்.

அதேபோல், ஒருவர் டிக்கெட்டில் தனது போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பிறகு வேற இடத்தில் இருந்து ஏற முடியாது. டிக்கெட்டில் மாற்றப்பட்ட போர்டிங் ஸ்டேஷனில் மட்டுமே ரயில் ஏற முடியும். வேறு நிலையங்களில் ஏறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் போர்டிங் பாயிண்ட் மற்றும் திருத்தப்பட்ட போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு கவனமாக இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுவது நல்லது.

1. முதலில் நீங்கள் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் https://www.irctc.co.in/nget/train-search .
2. உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, ‘புக்கிங் டிக்கெட் வரலாறு’ என்பதற்குச் செல்லவும்.
3. உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்து, ‘போர்டிங் பாயிண்டை மாற்று’ என்பதற்குச் செல்லவும்.
4. புதிய பக்கம் திறக்கும் அதில் உங்களுக்கான போர்டிங் ஸ்டேஷனை தேர்வு செய்துகொள்ளவும்.
5. பிறகு, ‘ சரி ‘ என்பதை க்ளிக் செய்து உறுதிபடுத்திக்கொள்ளவும்.
6. போர்டிங் ஸ்டேஷனை மாற்ற உங்கள் மொபைலில் ஒரு எஸ்எம்எஸ் வரும்.

Comments

Popular posts from this blog